ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸுக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்த வழக்கு: வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இசைப் படைப்புகளுக்கு சேவை வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசைப் படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜிஎஸ்டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஜிஎஸ்டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இசைப் படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான். எனவே, தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in