தென் கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்கள் மழை

தென் கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்கள் மழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.26-ம் தேதி (இன்று) பொதுவாக வறண்ட வானிலை நிலவும். 27, 28-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை 22 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி, குறைந்தபட்சமாக சமவெளி பகுதியான நாமக்கல்லில் 16 டிகிரி, மலைப் பிரதேசமான ஊட்டியில் 7.6 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in