கவுரவர்கள் சூழ்ச்சி செய்தாலும் பாண்டவர்களுக்குதான் இறுதி வெற்றி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Updated on
1 min read

சென்னை: கவுரவர்கள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் பாண்டவர்களுக்குதான் இறுதி வெற்றி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாண்டவர்களுக்குதான் எப்போதும் இறுதி வெற்றி. எல்லாம் சட்டப்படி நடந்தது. எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை உள்ளது. இதனால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு.வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது. அரசியலில் ஓபிஎஸ்.,ஸின் எதிர்காலம் ஜீரோதான். ஓபிஎஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in