தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடை கட்டிடத்தில் விரிசல்

தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட துணிக்கடை கட்டிடத்தில் விரிசல்
Updated on
1 min read

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.

கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

</p><p xmlns="">ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p xmlns="">தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.</p><p xmlns="">சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p xmlns=""><img src="https://static.hindutamil.in/hindu/uploads/common/2017/05/31/anbu_3169939a.jpg"></p><table cellpadding="2" cellspacing="2" width="100%" border="1" xmlns=""><tr><td><p>செய்தியாளர்களிடம் பேசும் ஆட்சியர் அன்புசெல்வன்</p></td></tr></table><p xmlns=""><b>பாதுகாப்பு நடவடிக்கைகள்</b></p><p xmlns="">முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.</p><p xmlns="">சாலைப் போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p xmlns="">சம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.</p><p xmlns=""><img src="https://static.hindutamil.in/hindu/uploads/common/2017/05/31/b0224bf2-b2d7-4905_3169944a.jpg"></p><p xmlns="">இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p xmlns="">சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.</p><p xmlns="">ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்</p><p xmlns=""><b>படங்கள்: க.ஸ்ரீபரத்</b></p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in