Published : 24 Jan 2023 07:41 PM
Last Updated : 24 Jan 2023 07:41 PM

சென்னையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

கோப்புப்படம்

சென்னை: “ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க, ஜனவரி 29-ம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து பொருளில் விவாதிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x