ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மநீம ஆலோசனை; கமல்ஹாசனுடன் காங். நிர்வாகிகள் சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மநீம ஆலோசனை; கமல்ஹாசனுடன் காங். நிர்வாகிகள் சந்திப்பு
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், கமல்ஹாசனை காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த மநீம மூத்த நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் எம்எல்ஏ அசன் மௌலானா ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in