

மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக 3 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகு தியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல் மருவத்தூர் அடுத்த சோத்துப் பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். பிளம்ப ராக பணிபுரிந்து வருகிறார். இவ ருடைய மனைவி மங்களலட் சுமி(30). இவர்களுக்கு, சுஜிதா(4) மற்றும் தாட்சாயிணி(2), தரணி(2) என்ற 3 பெண் குழந்தைகள்.
குடும்பப் பிரச்னை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலை யில், இருவருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட தகராறில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. பின்னர், தாமோதரன் வெளியே சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டின் பின்னால் உள்ள விவசாயக் கிணற்றில் மங்களலட்சுமி இறந்த நிலையில் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர், மேல்மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர். விரைந்த வந்த போலீ ஸார், அவரது உடலை மீட்டபோது 3 குழந்தைகளின் உடலும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீஸார், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது கணவர் தாமோதரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.