சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Updated on
1 min read

வார்தா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (இன்று) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த மூன்று மாவட் டங்களில் உள்ள தனியார் நிறு வனங்களுக்கும் திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை விடுமாறு மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கை மேற் கொள்ள சென்னை, திருவள்ளூ ருக்கு தலா 2 குழுக்கள், காஞ்சிபுரத்துக்கு ஒரு குழு என, தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதே போல், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், திருவள்ளூரில் ஒரு குழுவும், சென்னையில் இதர குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தேவையான இடங்களில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in