மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனபாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுதனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் கோடியக்கரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 12மீனவர்களையும், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண, இருதரப்புமீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in