“நம்ம ஸ்கூல்” திட்டம்: முதல் நாளில் ரூ.50 கோடி நன்கொடை

“நம்ம ஸ்கூல்” திட்டம்: முதல் நாளில் ரூ.50 கோடி நன்கொடை
Updated on
1 min read

சென்னை: அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடித் திட்டமான “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ எல்லாவற்றையுமே அரசே செய்துவிட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். அரசு பள்ளியால் பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தை இத்திட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம். அனைவருடைய உதவியும் ஆதரவும் நிச்சயம் தேவை.

நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும் கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், நம் ஆசிரியர்கள், நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கென செலவிடப்படும்” என்று உறுதி அளித்தார். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in