முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் மனோகர் (59). சென்னை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மதியம் ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சக போலீஸார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உதவி ஆய்வாளர் மனோகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in