ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்பு

ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்பு
Updated on
1 min read

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 1,350 ரயில்வே போலீஸார் மற்றும் 3,000 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இணைந்து, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 350 ரயில்வே போலீஸார் மற்றும் 350 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in