ஜெயலலிதா மறைவையொட்டி இறந்த 77 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: அதிமுக அறிவிப்பு

ஜெயலலிதா மறைவையொட்டி இறந்த 77 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: அதிமுக அறிவிப்பு
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் இருந்தபோதும், மறைந்த அதிர்ச் சியிலும் இறந்த 77 பேர் குடும் பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட செய்தி கேட்டும், அவர் மண் உலகை விட்டு பிரிந்து சென்றார் என்ற செய்தி கேட்டும் அதிர்ச்சியடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், சேலம், திரு வண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த 77 பேரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறை வனை பிரார்த்திக்கிறோம். உயி ரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் குடும்ப நல உதவியாக தலா ரூ.3 லட்சம் வழங் கப்படும். மேலும், தீக்குளித்த விருத்தாசலத்தைச் சேர்ந்த கே.கணேசன் மற்றும் தன் விரலை வெட்டிக் கொண்ட திருப்பூரைச் சேர்ந்த மாகாளி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதுடன், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in