Published : 16 Dec 2016 12:07 PM
Last Updated : 16 Dec 2016 12:07 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் வெள்ளிக்கிழமை மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரு அணி வீரர்களும் வரிசையில் நின்றபடி மவுன அஞ்சலி செலுத்தினர். இதை தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவு:
>#TeamIndia & >@englandcricket pay homage to the passing away of former TN CM J Jayalalithaa Ji >#INDvENG>pic.twitter.com/iVx4BiMxRG
— BCCI (@BCCI) >December 16, 2016
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT