Published : 20 Nov 2022 04:20 AM
Last Updated : 20 Nov 2022 04:20 AM

சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் அறிவிப்பு

நாமக்கல்: சென்னை, கோவை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23ல் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் அறிவித்து உள்ளார்.

இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு நிர்வாக கட்டமைப்பை தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்ட அரசாணை எண் 115-யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி டிச.23-ல் சென்னை, கோவை, மதுரை, சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய 7 மண்டலங்களில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தவது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x