ஹூண்டாய் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வழங்கினர்

ஹூண்டாய் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வழங்கினர்
Updated on
1 min read

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் செல​வில் 18 அரசு பள்​ளி​களுக்கு 900 இருக்​கைகள் வழங்​கப்​பட்​டன.

ஹூண்​டாய் மொபிஸ் சிஎஸ்​ஆர் எனப்​படும் பெருநிறுவன சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக 18 அரசுப் பள்​ளி​களுக்கு ரூ.70 லட்​சம் செல​வில் 900 இருக்​கைகளை (Bench Desk) வழங்க முன்​வந்​தது.

அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகள் வழங்​கும் நிகழ்ச்சி எழும்​பூர் பிரசிடென்சி மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்​து​கொண்டு 18 அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகளை வழங்​கினர். பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பெற்​றுக்​கொண்​டனர்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா

பேசுகை​யில், “அடுத்த 10 ஆண்​டுக்​குள் அரசுப் பள்​ளி​களை நாட்​டின் தலைசிறந்த பள்​ளி​களாக உரு​வாக்கு​வோம். பள்​ளி​களில் பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும்.

உடற்​கல்விக்கு வாரம் இரு பாட​வேளை​கள் மட்​டும் இருப்​பது போதாது. பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் தின​மும் வகுப்​பு​கள் நடை​பெற வேண்​டும்” என்​றார் அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து விஷ​யங்​களை​யும் தவெக அரசு செய்​யும்.

அதற்கு பதிலாக, மாணவர்​கள் தங்​கள் தன்​னம்​பிக்​கை, தமிழ் ஆர்​வம், தலை​மைத்​து​வப் பண்பு ஆகிய​வற்றை வளர்த்​துக் கொள்ள வேண்​டும்” என்றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், ஹூண்​டாய் மொபிஸ் நிறு​வனப் பொது​மேலா​ளர் ஹூமின் ஹோ, ஆசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

ஹூண்டாய் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வழங்கினர்
எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in