Published : 21 Oct 2022 07:12 AM
Last Updated : 21 Oct 2022 07:12 AM

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய ஆங்கில நூல் நாளை வெளியீடு

ஏ.கே.ராஜன்

சென்னை: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றநீதிபதி ஏ.கே.ராஜன் எழுதியுள்ள ஆங்கில நூல் வெளியீட்டு விழா நாளை (அக்.22)நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதியுள்ள ‘இந்தியஅரசமைப்பு: அரசமைப்புசட்டம் மட்டுமே அல்ல’ (Constitution of India: Is Not What it is)என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினாவளாகம் பிளாட்டினம் ஜூப்ளிகலையரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் உச்ச நீதிமன்றநீதிபதி துரைசாமி ராஜூ தலைமை வகிக்க, தமிழகநிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புத்தகத்தை வெளியிடுகிறார். முதல் பிரதியை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் கர்நாடகஅரசு முன்னாள் தலைமை வழக்கறிஞரான ரவிவர்மா குமார் பெற்றுக்கொள்கிறார். விழாவில், திராவிடர் கழகதலைவர் கே.வீரமணி, சென்னை உயர் நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் ஏ.தியாகராஜன், வழக்கறிஞர் பி.பி சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x