வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய துணிச்சலான ராணுவ தளபதி மற்றும் திறமையான நிர்வாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது புகழை போற்றுவோம்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வரி செலுத்த மறுத்து, தாய் மண்ணை காக்க இறுதி மூச்சுவரை போராடி, அனைவரது நெஞ்சங்களில் விடுதலை வேட்கையை ஆழமாக பதித்து, வீரத்துக்கு இலக்கணமாய் விளங்கியவர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து வரிசெலுத்த மறுத்ததோடு, அந்நியருக்கு காவடி தூக்குவதைவிட தூக்குக்கயிறே மேல் என தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்துக்கு இலக்கணமாய் திகழ்ந்த மாவீரர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர். அடிமையாய் வாழ்வதைவிட வீரனாய் சாவதே மேல் என்று நாட்டைக் காக்க போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தில் அவரது வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குவோம்.

டிடிவி தினகரன்: நாட்டின் விடுதலைப் போரில் தனி இடம் பெற்றவரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உறுதியோடு போரிட்டவரும், சுதந்திரத்துக்காக தன் உயிரையே விலையாக கொடுத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றிடுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in