சிதம்பரம் பகுதியில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் மலைக்குறவர்கள் அலைக்கழிப்பு

சிதம்பரம் பகுதியில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் அல்லாடும் மலைக்குறவர் சமூக மாணவர்கள்.
சிதம்பரம் பகுதியில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் அல்லாடும் மலைக்குறவர் சமூக மாணவர்கள்.
Updated on
1 min read

சிதம்பரம் பகுதியில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் மலைக் குறவர் சமூக மாணவர்கள் அல்லாடிவருகின்றனர்.

கொத்தங்குடி ஊராட்சிக்குட் பட்ட, கதிர்வேல் நகர், தில்லை யம்மன் நகர், அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள 20 அம்ச நகர் உள்ளிட்ட சிதம்பரம் நகரையொட்டிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மலைக்குறவர் சமூக மக்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகிறார்கள்.

இவர்கள் பன்றி வளர்ப்பது, கூடை, முறம் பின்னியும், பிளாஸ்டிக் பொருட்களை தெருத்தெருவாக வியாபாரம் செய்தும் வருகின்றனர். தாங்கள் செய்யும் தொழிலையே பிள்ளைகள் செய்யக்கூடாது என,அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி பயில செய்து வருகின்றனர். சாதி சான்றிதழ் வழங்காததால், அவர்களால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உள்ளது.

முன்னோர்கள் மற்றும் ரத்த உறவு முறையினர் வைத்திருக்கும் சாதி சான்றிதழை அடிப்படையாக கொண்டு, தமிழக அரசு உடனடியாக மலைக்குறவர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாதி சான்றிதழ் கேட்டு சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட் டுள்ளன.

இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் தேவி என்பவர் கூறுகையில், "சாதி சான்று கேட்டு தரவில்லை என்ற மன உளைச்சலில் இருக்கிறோம். எங்கள் பிள்ளைகளும், மற்ற சமூக மக்கள் போல் கல்வி பயின்று நல்லநிலைக்கு வர , எங்களுக்கு சாதி சான்று விரைவில் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in