தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவின்படி, வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, சிபிசிஐடி ஐஜியாகவும், ஆயுதப்படை ஐஜி கண்ணன், வடக்கு மண்டல ஐஜியாகவும், சென்னை பரங்கிமலை துணை ஆணையர் பிரதீப், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது படைப்பிரிவு காமண்டர் தீபக் சிவாச், சென்னை பரங்கிமலை துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டர் சமய் சிங் மீனா, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் (கிழக்கு), சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் (கிழக்கு) குமார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in