சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு

சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு

Published on

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் அக்.1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in