மதுரை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் அக்குபஞ்சர் மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார்.

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ஏற்கெனவே மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன், நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வடக்கு வாசல் மாப்பாளையத்தை சேர்ந்த அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வரும் அபுதாகிர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மதுரையில் தற்போதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in