திமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீதான மிரட்டலும், தாக்குதலும் அதிகரித்துள்ளது: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: திமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in