மத்திய அரசு வரிகள் காரணமாக இனிப்புகள் விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்

மத்திய அரசு வரிகள் காரணமாக இனிப்புகள் விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசு வரிகள் காரணமாக இனிப்புகள் விலையை உயர்த்தும் நிலை ஏற்படுவதாக தமிழக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகளை பால்வளத் துறை அமைச்சர் சா. மூ.நாசர் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், இனிப்பு விலை உயர்வு தொடர்பாக பதில் அளித்த அவர், "எல்லா இனிப்பு வகைகளும் தனியார் விற்பனை நிறுவனங்களை ஒப்பிடும் போது 20% குறைத்து தான் விற்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாகவே உயர்த்தபட்டுள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி போடுகிறது. மத்திய அரசு நேர்முகமாக 5 சதவீதம் ஜிஎஸ்டியை உயர்த்துகிறது. மறைமுகமாக 20% சதவீதம் உயர்த்துகிறது. அதனால்தான் நாமும் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பால் விலையை குறைத்ததன் காரணமாக வருடத்திற்கு ரூ.225 கோடி இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஆவினில் ரூ.85 லட்சம் நஷடம் ஏற்படுகிறது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in