100 நாள் வேலை பணி ஆணைகள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், கூடுதல் அதிகாரம் வேண்டும், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் வேரான உள்ளாட்சிகள் வலிமையாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும். அப்போதுதான் காந்தியடிகள் கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in