சேலத்தில் விரைவில் மாநாடு - ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தகவல்

சேலத்தில் விரைவில் மாநாடு - ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தகவல்
Updated on
1 min read

சேலம்: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முந்தைய தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது. தற்போது வந்துள்ள தீர்ப்பு, எங்களுக்கு எதிராக உள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். அதன்படி, இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள்பக்கம் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி தலைமை அலுவலகத்துக்கு யாரும் செல்லலாம். சேலத்தில் விரைவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in