படப்பை திமுக கவுன்சிலர் கொலையில் 8 பேர் கைது

படப்பை திமுக கவுன்சிலர் கொலையில் 8 பேர் கைது
Updated on
1 min read

படப்பையில் திமுக கவுன்சிலர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து மணிமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

படப்பை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). படப்பை ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் அப்பகுதி திமுக இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பை டேவிட் நகர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்துக்கு பிரார்த் தனைக்காக சென்றார். அப்போது அங்கேயே அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். தேவாலயத்துக்குள்ளேயே நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கொலை குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தினேஷ், சுரேஷ், விஸ்வநாதன், மணிகண்டன், அஜித்குமார், பிரகாஷ் மற்றும் மணிமங்கலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில்தான் கொலைக் கான காணம் என்ன என்பது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in