நெய்வேலி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது: 2 பேர் உயிர் தப்பினர்

நெய்வேலி அருகே கீழுர் கிராம சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
நெய்வேலி அருகே கீழுர் கிராம சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
Updated on
1 min read

நெய்வேலி அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த 2 பேர் அதிஷ்டவசமாக தப்பினர்.

நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (58). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் எழிலுடன் மயிலாடுதுறையில் இருந்து காரில் நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை குருசாமி ஒட்டினார்.

இரவு கார் நெய்வேலி அருகே கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.உடனே காரை நிறுத்திவிட்டு குருசாமி, எழில் ஆகியோர் கீழே இறங்கி ஓடிவிட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீய ணைப்பு நிலையஅலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கார் முழுதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in