தமிழக மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு
Updated on
1 min read

ராமேசுவரம் அருகே சேராங்கோட் டையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 200-க்கும் மேற் பட்ட மீனவர்கள் கடந்த 2 நாட் களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற னர். இதில், 20 மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அங்கு வந்த இலங்கை கடற்படையினர், பெரிய படகில் இருந்த அய்யாசாமி, உதயசிங் உட்பட 18 பேரை நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். மற்றொரு சிறிய படகில் இருந்த லெட்சுமண குமார், கணேஷ் ஆகியோர் கரை திரும்பி மற்ற மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி இலங்கை கடற்படையினர் நுழைந்து 18 பேரை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடு விக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் ராமேசு வரம் மீன்துறை அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை முற் றுகையிட்டனர். இதனிடையே, 18 மீனவர்களிடம் இலங்கை கடற் படையினர் விசாரணை நடத்தினர். பின்னர், மீனவர்களையும், அவர் களின் நாட்டுப்படகையும் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். 18 மீனவர்களும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேசுவரம் வந்தடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in