‘உங்கள் குரல் - தெரு விழா’ | பொதட்டூர்பேட்டையில் நாளை நடைபெறுகிறது

ஏ.ஜி.ரவிச்சந்திரன்
ஏ.ஜி.ரவிச்சந்திரன்
Updated on
1 min read

திருத்தணி: பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகளை, அந்தந்த பகுதிஉள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் தெரிவிப்பதற்காக ‘உங்கள் குரல்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு திருவள்ளூர் மாவட்டம்- பொதட்டூர்பேட்டை பேரூராட்சிபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ‘உங்கள் குரல்’ வசதி மூலம் தெரிவித்த பிரச்சினைகள் மற்றும் மக்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் பொதுமக்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்.

இதற்கான நிகழ்ச்சி, பொதட்டூர்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஏ.வி.நேதாஜி அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் டி.ஜி.ராமகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in