Published : 15 Jul 2022 04:06 AM
Last Updated : 15 Jul 2022 04:06 AM

அதிமுகவில் கோஷ்டி பூசல் வருத்தம் அளிக்கிறது: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி

திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் ரூ. 16 லட்சத்தில் புதிய நிழற்குடை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால்தான் அங்கிருந்து வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

அதிமுக கோஷ்டி பூசல் விவகாரம் பாஜகவுக்கு வருத்தம் அளிக்கிறது.

அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் நாங்கள் சாதகமாக செயல்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் அருகே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு திமுக அரசு சென்றிருக்கக்கூடாது.

திமுகவுக்கு எதிர்க்கட்சியாகவே பாஜக உள்ளது. அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருக்க வேண்டும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அக்கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார் ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x