Published : 08 Jun 2022 08:02 AM
Last Updated : 08 Jun 2022 08:02 AM

முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கம்புணரி வருகை: சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்

சிங்கம்புணரி: மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவுமதுரை வந்த முதல்வர்ஸ்டாலின், கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பார்வையிட்டார்.

மதுரையில் இருந்து இன்றுகாலை 9 மணிக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேகோட்டை வேங்கைப்பட்டிக்கு வரும் முதல்வர், அங்கு 9 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்தசமத்துவபுரத்தைத் திறந்து வைக்கிறார்.

பின்னர் காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடக்கும் விழாவில், 59 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.240 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x