Published : 05 Jun 2022 04:15 AM
Last Updated : 05 Jun 2022 04:15 AM

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு மின்னுற்பத்தி நிலைகளில், முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில்உள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், 2-வது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட், 2-வது நிலையின் 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் என 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த பழுது சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x