

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு மின்னுற்பத்தி நிலைகளில், முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில்உள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2-வது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட், 2-வது நிலையின் 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் என 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த பழுது சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.