மதுரை, கோவை, ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு

மதுரை, கோவை, ஆவடி உள்ளிட்ட 6 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடிஆகிய 6 மாநகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச்செயலர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜித் சிங்காக்லோன், மதுரை மாநகராட்சிஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதாப், கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநரும், திட்ட இயக்குநருமான வி.சிவகிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை வணிக வரிகள் (மாநில வரிகள்) இணை ஆணையர் ஆனந்த் மோகன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை விருந்தினர் இல்லத்தின் முன்னாள் இணை மரபு அதிகாரி கே.தர்பகராஜ், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in