பேரறிவாளன் விடுதலை | “வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” - கமல்ஹாசன்

பேரறிவாளன் விடுதலை | “வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” - கமல்ஹாசன்
Updated on
1 min read

சென்னை: ''வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்'' என்று பேரறிவாளனை விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம்.

பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின்
போர்க்குணமும்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in