வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க டி.ஆர்.பாலு கோரிக்கை

வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க டி.ஆர்.பாலு கோரிக்கை
Updated on
1 min read

மழையின் காரணமாக வாக்குப்பதிவு செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை பகுதியில் டி.ஆர்.பாலு வாக்களித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்'' என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in