ஆர்.கே.பேட்டை அருகே அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

இடிந்து விழுந்த பள்ளி நடைமேடையின் கைப்பிடிச் சுவர்  (உள்படம்) உயிரிழந்த மோகித்

இடிந்து விழுந்த பள்ளி நடைமேடையின் கைப்பிடிச் சுவர் (உள்படம்) உயிரிழந்த மோகித்

Updated on
1 min read

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கொண்​டாபுரம் அரசு பள்​ளி​யில் சுவர் இடிந்து விழுந்​து, 7-ம் வகுப்பு மாணவர் உயி​ரிழந்த சம்​பவம், சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆர்​.கே.பேட்டை அருகே கொண்​டாபுரம் கிராமத்​தில் அரசு உயர்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது.

இப்​பள்​ளி​யில் கொண்​டாபுரம் மற்​றும் அதையொட்​டி​ய பகு​தி​களைச் சேர்ந்த 130-க்​கும் மேற்​பட்ட மாணவ-​மாண​வியர் படித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பள்​ளி​யில் தற்​போது அரை​யாண்டு தேர்வு நடை​பெற்று வரும் நிலை​யில், நேற்று மதிய உணவு இடைவேளை​யின் போது, மாணவ-​மாண​வியர் பள்ளி வளாகத்​தில் சத்​துணவு அருந்தி கொண்​டிருந்​தனர்.

அப்​போது, 7-ம் வகுப்பு மாணவ​ரான, கொண்​டாபுரம் பகு​தியை சேர்ந்த சரத்​கு​மார் மகன் மோகித் (11), பள்ளி நடைமேடை பகு​தி​யில் சத்​துணவு அருந்தி கொண்​டிருந்​திருந்த போது, ஏற்​க​னவே விரிசல் அடைந்த, 4 அடி உயர கைப்​பிடிச் சுவர் இடிந்​து, மோகித் மீது விழுந்​தது. இதில், படு​காயமடைந்த மோகித் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்​து, தகவலறிந்த மோகித்​தின் பெற்​றோர், உறவினர்​கள், பொது​மக்​கள் என, 200-க்​கும் மேற்​பட்​டோர் பள்​ளியை முற்​றுகை​யிட்​டு, விரிசலடைந்த, நடைமேடை​யின் கைப்​பிடிச் சுவரை அகற்ற, தலைமை ஆசிரியர் ஏன் நடவடிக்கை எடுக்​க ​வில்​லை? விரிசலடைந்த கைப்​பிடிச் சுவர் அருகே மாணவர்​களை உணவருந்த அனு​ம​தித்​தது ஏன்? என, அடுக்​கடுக்​காக கேள்வி​களை எழுப்​பி, உயி​ரிழந்த மாணவர் மோகித்​தின் உடலை, பிரேத பரிசோதனைக்​காக பள்ளி வளாகத்​தில் இருந்​து,எடுக்​க​வி​டா​மல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்​து, திரு​வள்​ளூர் மாவட்ட கல்வி அலு​வலர் அமு​தா, திருத்​தணி டிஎஸ்பி (பொறுப்​பு) கந்​தன், திருத்​தணி கோட்​டாட்​சி​யர் கனி​மொழி, ஆர்​.கே.பேட்டை வட்​டாட்​சி​யர் சரஸ்​வதி உள்​ளிட்ட அதி​காரி​கள் சம்பவ இடம் விரைந்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்​டோரிடம் பேச்சு வார்த்தை நடத்​தினர். இதையடுத்​து, சுமார் 4 மணி நேரம் நீடித்த, பெற்​றோர், பொது​மக்​களின் போராட்​டம் முடிவுக்கு வந்​தது.

பிறகு, ஆர்​.கே.பேட்டை போலீ​ஸார், மாணவர் மோகித்​தின் உடலை கைப்​பற்​றி, பிரேத பரிசோதனைக்​காக திருத்​தணி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்​து, போலீ​ஸார், பள்ளி சுவர் இடிந்து விழுந்​து, உயி​ரிழப்பு ஏற்​பட்​டது தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

நிவாரண உதவி: இதற்​கிடையே, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், 7-ம் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் மோகித் பள்​ளி​யின் பக்​க​வாட்டு சுவர் இடிந்து விழுந்​த​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார் என்ற துயர​மான செய்​தி​யைக் கேட்டு மிகுந்த வருத்​த​மும் வேதனை​யும் அடைந்​தேன்.

உயி​ரிழந்த மாணவரின் குடும்​பத்​தினருக்​கும், உறவினர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக்​கொள்​வதோடு, அவரது குடும்​பத்​திற்கு முதலமைச்​சரின் பொது நிவாரண நிதியி​லிருந்து ரூ. 3 லட்​சம் வழங்​கிட​வும் ஆணை​யிட்​டுள்​ளேன் என தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>இடிந்து விழுந்த பள்ளி நடைமேடையின் கைப்பிடிச் சுவர்  (உள்படம்) உயிரிழந்த மோகித்</p></div>
உலகை ஆளப்போகும் முக்கியப் படிப்பு வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in