தேவகோட்டை | பள்ளிக்கு 4 கி.மீ. நடந்து செல்லும் மாணவர்கள்

தேவகோட்டை | பள்ளிக்கு 4 கி.மீ. நடந்து செல்லும் மாணவர்கள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு தினமும் 100 மாணவர்கள் 4 கி.மீ. நடந்து சென்று வருகின்றனர்.

தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி விளங்குடி கிராமத்தில் 150 குடும்பங்களும், விளங்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் 40 குடும்பங்களும் வசிக்கின் றன.

மேலும் கண்ணங்குடியில் இருந்து 4 கி.மீ.-ல் உள்ள இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் 4 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து விளங்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த வனிதா கூறியதாவது: எங்கள் பகுதிக்கு சாலை இல்லாததால் ஆம்புலன்ஸ் கூட வராது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கள் பகுதியில் பேருந்தை பார்த் ததில்லை. தனித்தீவு போல் வாழ்கிறோம். எங்களுக்கு சாலை மற்றும் பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in