Published : 24 Apr 2022 06:15 AM
Last Updated : 24 Apr 2022 06:15 AM

வல்லூர் அனல்மின் நிலைய 3-வது அலகில் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்

வல்லூர் அனல் மின் நிலையத்தில், 3-வது அலகில் கொதிகலன்கசிவு காரணமாக 500 மெகாவாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் தினமும்1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று 3-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 மற்றும் 2-வது அலகில் தலா 500 மெகாவாட் வீதம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கோளாறு ஏற்பட்ட 3-வது அலகை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x