

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் 2015-ல் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் வேறு சாதிப் பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் உட்பட பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் யுவராஜ்உட்பட 10 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். அதில், சிசிடிவிகாட்சிகள், டிவி பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றின்அடிப்படையில் கீழமை நீதிமன்றம்தண்டனை வழங்கியது. சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் கடத்தல்,கொலை தொடர்பான பதிவுகள் இல்லை. இருப்பினும் அந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கப்பட்டுஉள்ளது.
அதிகாரிகள், நிபுணர்களின் சாட்சிகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 10 பேரும் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். எனவே மேல்முறையீடு மனு விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள்சுப்பிரமணியன், சதீஷ்குமார் விசாரித்தனர். யுவராஜ் உட்பட 10 பேரின்மேல்முறையீடு மனு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா பதில் தர உத்தரவிட்டு, வழக்கை ஏப்.11-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.