திருவண்ணாமலை: 40 சாதனை பெண்களுக்கு விருது

வேட்டவலம் வள்ளலார் சபையில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
வேட்டவலம் வள்ளலார் சபையில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
Updated on
1 min read

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் வள்ளலார் சபையில் 40 சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கவிஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழியக்கம் பொதுச் செயலாளர் சின்ராசு, எழுத்தாளர் சண்முகம், விசுவ நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் பச்சையம்மாள் வரவேற்றார். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட முனைவர் உமாதேவி, பேராசிரியர் பாக்கியலட்சுமி, கவிஞர் தேவிகா ராணி, சுனத்தா, அல்லி உட்பட 40 பெண்களுக்கு தொழிலதிபர் சந்திரசேகர் விருது வழங்கினார். முடிவில், சபை நிர்வாகி சரவணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in