53-வது நினைவு தினம்: அண்ணா நினைவிடத்தில் முதல்வர் நாளை அஞ்சலி

53-வது நினைவு தினம்: அண்ணா நினைவிடத்தில் முதல்வர் நாளை அஞ்சலி
Updated on
1 min read

சென்னை: அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.3) அஞ்சலி செலுத்துகிறார். இது கரோனா காலம் என்பதால் பெருங்கூட்டமாக கூட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் பிப்ரவரி 3-ம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முன்னணியினர் பிப்ரவரி 3-ம் தேதி காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இது கரோனா காலம் என்பதால் பெருங்கூட்டமாக கூட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in