கவுசல்யாவுக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் நிதி உதவி

கவுசல்யாவுக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் நிதி உதவி
Updated on
1 min read

உடுமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் படிப்புச் செலவுக் காக எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார் பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் மற்றும் கவுசல்யாவை, கடந்த மாதம் 13-ம் தேதி கும்பல் தாக்கியதில், சங்கர் இறந்தார். காயமடைந்த கவுசல்யா தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

நேற்று குமரலிங்கத்தில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க நிர்வாகிகள் கவுசல்யாவை சந்தித்து ஆறுதல் கூறினர். அவரது உயர் கல்வி செலவுக்காக முதல் கட்ட நிதியுதவியாக ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் சாமுவேல்ராஜ், யு.கே. சிவஞானம், மாதர் சங்க நிர்வாகி ராதிகா, எல்ஐசி ஊழியர்கள் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் கிரிஜா, பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in