Published : 01 Feb 2022 08:23 AM
Last Updated : 01 Feb 2022 08:23 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி பதஞ்சலி இணைந்து இரு வகை புதிய ரூபே கடன் அட்டை அறிமுகம்

பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவன நிர்வாக இயக்குநர் ஆச்சாரிய பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பிஎன்பி ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தினர்.

சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியும் (பிஎன்பி) பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனமும் இணைந்து இந்தியதேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்பிசிஐ) துணையுடன் 2 வகையான ரூபே கடன்அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிஎன்பி ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் என்ற இரு வகைகளில் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பதஞ்சலிபொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், லாயல்டி புள்ளிகள், காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. பதஞ்சலி ஸ்டோர்களில்ரூ.2,500-க்குமேல் பொருட்களைவாங்குபவர்களுக்கு ரூ.50 உச்சவரம்புடன் 2 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

இரு வகை கடன் அட்டைகளையும் வாங்கும்போதே 300 ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும். மேலும் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் இதைப் பயன்படுத்தலாம். பிஎன்பி ஜீனி செயலி மூலம் கடன் அட்டையை நிர்வகிக்க முடியும். பயன்பாட்டுக்கு ஏற்ப ரிவார்டு புள்ளிகள், சுலபத் தவணை வசதி, தானாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவையும் கூடுதல் வசதியாகக் கிடைக்கும்.

விபத்தில் இறப்பு மற்றும் தனிப்பட்ட முழு ஊனம் ஏற்பட்டால் பிளாட்டினம் அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம், செலக்ட் அட்டைதாரர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். மேலும் பிளாட்டினம் அட்டையை இலவசமாகப் பெறலாம். ஆண்டு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். செலக்ட் அட்டை பெற ரூ.500 கட்டணம், ஆண்டு கட்டணம் ரூ.750. முந்தையஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் ஒருமுறையாவது அட்டையைப் பயன்படுத்தினால், ஆண்டுகட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x