Published : 23 Jan 2022 05:40 AM
Last Updated : 23 Jan 2022 05:40 AM

தமிழகம் முழுவதும் கூட்டுக் குடிநீர், பாதாள சாக்கடை உட்பட ரூ.662 கோடி திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்: ரூ.8.93 கோடியில் 5 புதிய பணிகளுக்கு அடிக்கல்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.662.22 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருப்பூர் ஒன்றியங்களில் 155 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.99.24 கோடி, கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் 274 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.81.41 கோடி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி (தெற்கு), பொள்ளாட்சி (வடக்கு), கிணத்துக்கிடவு ஒன்றியங்களில் 212 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.69.31 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் ராயக்கோட்டை மற்றும் 28 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நாமக்கல் நகராட்சிக்கு ரூ.185.24 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டப் பணிகள் முடிவுற்றுள்ன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் ரூ.30.11 கோடி, எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் ரூ.19.45 கோடி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் ரூ.51.50 கோடி, தஞ்சை மாவட்டம்வல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியில்ரூ.35.84 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.11.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட சிவகுளம், முள்ளிக்குளம், மீளவிட்டான் குளம், மதுரை மாநகராட்சி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடியில் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றியமைப்பு ஆகிய திட்டங்களும் முடிவுற்றுள்ன.

திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கரூர் சாலை, பெஸ்கி காலேஜ் எதிர்புறம் ரூ.70 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையக் கட்டிடம், கோவை மாநகராட்சி கரும்புக் கடைதெற்கு மண்டலத்தில் ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார மையக் கட்டிடம், ரூ.77 லட்சத்தில் காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், ரூ.50 லட்சத்தில் கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள உணவுக்கூடம் என மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி திருவள்ளுவர் சாலையில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட உள்ள நூலகம், அறிவுசார் மையம், கமலா நேரு மருத்துவமனை சாலையில் ரூ.1.40 கோடியில் நகர சமுதாய சுகாதார மையமாக மேம்படுத்தும் பணி, ஓசூர் மாநகராட்சி நேரு நகரில் ரூ.1.03 கோடியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான கட்டிடம், காமராஜ் காலனியில் ரூ.2.50 கோடியில் நூலகம், அறிவுசார் மையம், மத்திகிரி பகுதியில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட உள்ள நவீனஎரிவாயு தகனமேடை என ரூ.8.93 கோடியிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ், காணொலியில் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன், அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x