காணும் பொங்கலில் தமிழகத்தில் ஊரடங்கு - புதுச்சேரி சுற்றுலா தலங்கள் களையிழந்தன: மாலையில் உள்ளூர் மக்கள் குவிந்தனர்

காணும் பொங்கலில் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் புதுச்சேரிக்கு   சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் மாலையில் உள்ளூர் மக்கள்கடற்கரையில் அதிகளவில் குவிந்தனர். படம்: எம்.சாம்ராஜ்
காணும் பொங்கலில் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் மாலையில் உள்ளூர் மக்கள்கடற்கரையில் அதிகளவில் குவிந்தனர். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

காணும் பொங்கலில் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் புதுச் சேரியில் வழக்கமாக மக்கள் கூடும் சுற்றுலா தலங்கள் களையிழந்து காணப்பட்டன.

காணும் பொங்கலன்று புதுச் சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அதிகளவில் புதுச்சேரிக்கு வருவார்கள். மணக்குள விநாயகர் கோயில், அன்னை ஆசிரமம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் நிரம்பி வழியும். ஆனால் இம் முறை கரோனா பரவலால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் வர முடியவில்லை.

இதனால் வழக்கமாக காணும் பொங்கலால் களைக்கட்டும் சுற்றுலாத் தலங்கள் முற்றிலும் களை இழந்து காணப்பட்டன.

பாரதி பூங்காவில் சிறார்களும், உள்ளூர் மக்கள் மட்டும் குறைந்த அளவில் வந்திருந்தனர். கடற்கரை சாலை வெறிசோடியது. படகு இல்லத்திலும் குறைந்தளவே மக்கள் வந்தனர்.

தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன.முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வில்லை. இதனால் இரு மாநில போலீஸாரும் புதுச்சேரி - தமிழகஎல்லைகளில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி - கடலூர் எல்லையானமுள்ளோடை, புதுச்சேரி - விழுப்பு ரம் எல்லையான மதகடிப்பட்டு, புதுச்சேரி - மரக்காணம் எல்லையான காலாப்பட்டு, புதுச்சேரி -திண்டிவனம் எல்லையான கோரிமேடு என அனைத்து எல்லைகளி லும் இரு மாநில போலீஸாரும் வாகனங்களை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். இதில்புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதி களுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீஸார் அனுமதிக் கவில்லை. இதேபோல் புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாததால் வெளி மாநில மக்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படு கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படிஇல்லாதவர்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரிப்பதன் காரணமாக புதுச் சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி - தமிழக எல்லை கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் மதியத்துக்கு பிறகு நோணாங்குப்பம் சுண் ணாம்பாறு படகு குழாமில் உள்ளூர் மக்கள் குவியத் தொடங்கினர். அங்குள்ள பல்வேறு வகை யான படகுகள் மூலமாக பாரடைஸ் பீச்சுக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் புதுச்சேரி பாரதி பூங்கா, கடற்கரை சாலை, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் மற்றும் பூரணாங்குப்பம் அடுத்த புதுக் குப்பம் ஆகிய கடற்கரை பகுதியில் உள்ளூர் மக்கள் மாலையில் அதிகளவில் குவிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in