

திமுகவை தில்லுமுல்லு கட்சி என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனத்து திமுக தலைவர் கருணாநிதி பதில் அளிக்காதது ஏன் என வைகோ வினவினார்.
நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "திமுக கட்சி கருணாநிதியின் பிடியில் இல்லை. அவரது மகன் பிடியிலும் இல்லை. யாரோ சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் இருக்கிறது.
திமுகவை தில்லுமுல்லு கட்சி என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளிக்காதது ஏன்? மவுனம் சம்மததத்துக்கு அறிகுறி என்று வசனம் எழுதியவர் பிரேமலதா விமர்சனத்துக்கு மவுனமாக இருப்பதால் அதை அவர் ஏற்றுக்கொள்கிறாரோ?
கருணாநிதிக்காக வருத்தப்படுகிறேன். அவரது அரசியல் வாழ்க்கையில் இத்தகைய ஏமாற்றம் அவர் அடைந்திருக்கமாட்டார். திமுக இன்று ஏளனத்துக்கு ஆளாகி இருக்கிறது" என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ''உடுமலைப்பேட்டை சங்கர் கொலையை கண்டித்து சென்னையில் அறப்போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.