ஆன்லைன் விசாரணையின்போது ஒழுங்கீனம்: வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவு

ஆன்லைன் விசாரணையின்போது ஒழுங்கீனம்: வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

சென்னை: உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் காணொலி காட்சி வாயிலாக ஆன்லைனில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது பெரம்பூர் செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காட்சி ஒளிபரப்பானது.

ஆன்லைன் விசாரணையின்போது நீதிபதி மற்றும் சக வழக்கறிஞர்கள் முன்னிலையில் அந்த வழக்கறிஞர் அநாகரீகமாக நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. அதையடுத்து இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது சிபிசிஐடிபோலீஸார் வழக்குப் பதிவுசெய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சிலும் அவர் தொழில் புரிய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, அந்த வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்அவர் ஜன.20 அன்று நேரில்ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in