8 மீனவர்கள் இலங்கையில் கைது

8 மீனவர்கள் இலங்கையில் கைது
Updated on
1 min read

தரங்கம்பாடி அருகில் உள்ள பெருமாள்பேட்டையைச் சேர்ந்த சின்னையன், வசந்த ராஜன், ராஜேந்திரன், வேலு ஆகிய 4 மீனவர்களும் கோடியக்கரை படகுத்துறை யில் இருந்து கடந்த 1-ம் தேதி பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இதே போல, வேதாரண் யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத் துறை மீனவர்கள் பாலமுரு கன், குட்டியாண்டி, கவி நேசன், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் ஆறுகாட்டுத்துறை யில் இருந்து பைபர் படகில் கடலுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கோடியக் கரைக்கு தென்கிழக்கே வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்கள் 8 பேரையும் நேற்று முன் தினம் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களின் படகுகளு டன் சிறைப்பிடித்துச் சென்ற னர். தகவலறிந்த மீனவர் களின் உறவினர்கள், மீனவர் களையும் அவர்களது படகு களையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in