பைக் விபத்தில் நகைச்சுவை நடிகர் பலி: மற்றொரு நடிகர் பலத்த காயம்

பைக் விபத்தில் நகைச்சுவை நடிகர் பலி: மற்றொரு நடிகர் பலத்த காயம்
Updated on
1 min read

பைக் விபத்தில் நகைச்சுவை நடிகர் செல்வகுமார் உயிரிழந்தார். மற்றொரு நடிகர் பலத்த காயமடைந்தார்.

தி.நகர் சீனிவாசா தெருவில் வசித்து வந்தவர் செல்வகுமார் (58). இவர் ‘அந்நியன்’, ‘ரமணா’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘பூலோகம்’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை நடிகராக நடித் துள்ளார். தொலைக்காட்சி தொடர் களிலும் நடித்துள்ளார். செல்வ குமாரும் அவரது நண்பரான நகைச் சுவை நடிகர் கோவை செந்திலும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பைக்கில் ஆழ்வார்பேட்டையில் இருந்து தி.நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

பைக்கை நடிகர் செல்வகுமார் ஓட்டிச் சென்றார். இரவு 9.30 மணி யளவில் ஜிஎன் செட்டி தெரு வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை யில் கவிழ்ந்தது. கீழே விழுந்தத்தில் தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை செந்திலின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அங் கிருந்த போலீஸார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காய மடைந்த கோவை செந்திலை ராயப் பேட்டை மருத்துவமனையில் சேர்த் தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

செல்வகுமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. திரையுல கைச் சேர்ந்த பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் செல்வகுமாரின் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. செல்வ குமாருக்கு கீதா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

ஹெல்மெட் அணியவில்லை:

இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பைக் கின் பிரேக் ஒயர் அறுந்திருந்ததே விபத்து காரணம் என்பதும், ஹெல் மெட் அணியாததால் தலையில் அடிப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள் ளது எனவும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in